Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்தை, இளைஞர்கள் சிலர் பெரிய கற்களை போட்டு நிறுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கலில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேகம்பூர் பகுதியை கடந்தபோது, பேருந்தில் பிரேக் வேலை செய்யாததை உணர்ந்த ஓட்டுநர், வேகத்தை குறைத்ததோடு, சாலையோரம் சென்றவர்களை நோக்கி கூச்சலிட்டார். இதைக்கேட்ட இளைஞர்கள் சிலர் பெரிய கற்களை பேருந்து டயர்களின் அடியில் போட்டு பேருந்தை நிறுத்தினர்.
இதனால் நிம்மதியடைந்த பயணிகள், தகுதியில்லா பேருந்துகளை தமிழக அரசு இயக்குவதாக புலம்பிவாறு சென்றனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.